உலகளவில் அதிகரித்து வரும் GPS ஜாமிங் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நோக்கில் பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சகம் (MoD) சாலிஸ்பரி அருகே அமைந்துள்ள ஒலி அற்ற விசேட பரிசோதனை அறையில் மேம்பட்ட GPS தடங்கல் மற்றும் எதிர்ப்பு தொழில்நுட்பங்களை சோதித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் போர் மற்றும் மத்திய கிழக்கு பதற்ற நிலைகளில் ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் கப்பல் இயக்கங்களை பாதிக்க GPS ஜாமிங் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் இதற்கு எதிரான பாதுகாப்பு திறன்களை மேம்படுத்தும் நடவடிக்கையாக இந்த சோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
குறிப்பாக ஹார்முஸ் நீரிணை பகுதியில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான GPS ஜாமிங் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த “சவுண்ட்லெஸ் சேம்பர்” எனப்படும் விசேட அறையில் வெளிப்புற சிக்னல்கள் அனைத்தும் தடுக்கப்பட்டு உண்மையான போர் சூழ்நிலையை ஒத்த அமைப்பில் GPS அமைப்புகள் எவ்வாறு செயலிழக்கின்றன என்பதையும் அவற்றை எவ்வாறு பாதுகாப்பது என்பதையும் பிரித்தானிய இராணுவம் ஆய்வு செய்து வருகிறது. நவீன போர்த் தந்திரங்களில் GPS தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றும் நிலையில் எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகளில் இந்த ஆய்வுகள் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.





Leave a Reply