கருங்கடல் வான்வெளியில் பிரிட்டன் Royal Air Force (RAF) கண்காணிப்பு விமானம் ஒன்றை ரஷ்ய போர் விமானங்கள் “மீண்டும் மீண்டும் ஆபத்தான முறையில்” தடுத்ததாக பிரிட்டன் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற இந்த சம்பவத்தில் ஆயுதமற்ற RAF RC-135 Rivet Joint உளவுத்துறை விமானம் சர்வதேச வான்வெளியில் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது ரஷ்யாவின் Su-27 மற்றும் Su-35 போர் விமானங்கள் மிக அருகில் பறந்ததாக கூறப்படுகிறது.
சில தருணங்களில் வெறும் ஆறு மீட்டர் தூரத்திற்கு மட்டுமே விமானங்கள் அணுகியதாகவும் அதனால் RAF விமானத்தின் அவசர பாதுகாப்பு அமைப்புகள் செயல்பட்டதுடன் தானியங்கி இயக்க முறை தற்காலிகமாக செயலிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கையை “ஆபத்தானதும் ஏற்றுக்கொள்ள முடியாததுமாக” பிரிட்டன் பாதுகாப்பு செயலாளர் John Healey கண்டித்துள்ளார்.
இருப்பினும் RAF விமான பணியாளர்கள் மிகுந்த தொழில்முறை திறனுடன் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றியதாகவும் அவர் பாராட்டியுள்ளார். ரஷ்யா–மேற்கு நாடுகள் இடையிலான இராணுவ பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் NATO மற்றும் ரஷ்யா இடையேயான உறவுகளை மேலும் பதற்றமடையச் செய்துள்ளது.





Leave a Reply