சீன தலைவர் Xi Jinping மற்றும் ரஷ்ய ஜனாதிபதி Vladimir Putin ஆகியோர் பெய்ஜிங்கில் நடைபெற்ற உயர்மட்ட சந்திப்பில் பரஸ்பரம் வரவேற்பு தெரிவித்து முக்கிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளனர். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சமீபத்திய சீனா பயணத்திற்குப் பின்னர் நடைபெற்ற இந்த சந்திப்பு உலக அரசியல் வட்டாரங்களில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இரு தலைவர்களும் இருதரப்பு வர்த்தகம் எரிசக்தி ஒத்துழைப்பு உக்ரைன் போர் நிலைமை மற்றும் மத்திய கிழக்கு பதற்றம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“சீனா – ரஷ்ய உறவு இதுவரை இல்லாத அளவுக்கு வலுவாக உள்ளது” என்று புதின் தெரிவித்ததாகவும் உலக அரசியல் மாற்றங்களின் மத்தியில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்த அணுகுமுறையை தொடரும் என ஷி ஜின்பிங் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இராணுவ மரியாதையுடன் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்வு மேற்கத்திய நாடுகளின் அழுத்தங்களுக்கு மத்தியில் மொஸ்கோ மற்றும் பெய்ஜிங் இடையிலான நெருக்கத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





Leave a Reply