மத்திய கிழக்கில் போர் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள கட்டுப்பாடு மற்றும் கடற்படை நடவடிக்கைகள் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் மீண்டும் கடுமையான இராணுவத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என எச்சரித்துள்ளார்.
இதேவேளை உலகின் முக்கிய எண்ணெய் கடத்தல் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஈரான் தனது கட்டுப்பாட்டை வலுப்படுத்த முயற்சிப்பதாகவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. லெபனானில் இஸ்ரேல் மற்றும் ஹெஸ்புல்லா இடையிலான பதற்றமும் தொடர்கின்றது எல்லைப் பகுதிகளில் வான் தாக்குதல்கள் மற்றும் ராக்கெட் ஏவுதல்கள் மீண்டும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மோதலால் உலக எண்ணெய் விலைகள் உயர்வடைந்துள்ளதுடன் சர்வதேச வர்த்தகமும் பாதுகாப்பு சூழலும் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. அமெரிக்கா, ஈரான் மற்றும் அதன் கூட்டாளிகள் இடையிலான பதற்றம் புதிய பிராந்திய மோதலாக மாறக்கூடும் என உலக நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன.





Leave a Reply