சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Austrian Airlines மத்திய கிழக்கு சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு பதற்றம் மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக Austrian Airlines தனது பல விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

மார்ச் 13, 2026 அன்று வெளியிட்ட அறிவிப்பில் டுபாய் விமான நிலையங்களில் விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகளால் அந்த பகுதிகளுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமானங்கள் குறைந்தபட்சம் மார்ச் 28 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் அம்மான் எர்பில் மற்றும் டம்மாம் போன்ற நகரங்களுக்கு செல்லும் சேவைகள் மார்ச் 15 வரை நிறுத்தப்பட்டுள்ளன.

அதேபோல் பெய்ரூத் சேவைகள் மார்ச் 28 வரை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தெல் அவீவ் மற்றும் டெஹ்ரான் நோக்கி செல்லும் விமானங்கள் ஏப்ரல் மாத தொடக்கம் வரை இயக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் பல தகவல்களுக்கு நமது பிரத்தியோக செய்தி தளத்தினை நாடுங்கள்

இந்த மத்திய கிழக்கு சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம் முக்கிய காரணமாக மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் இராணுவ பதற்றம் மேலும் டுபாய் விமான நிலையங்களில் விமான இயக்கங்களை குறைக்கும் முடிவு எடுத்திருப்பது குறிப்பிடப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்காக விமான நிறுவனம் தானாகவே மாற்று விமானங்களில் மீண்டும் முன்பதிவு செய்ய முயற்சி செய்து வருகிறது.

அதே நேரத்தில் மார்ச் 1, 2026க்கு முன்பு வாங்கப்பட்ட டிக்கெட்டுகளுக்கு முழு பணத்தீர்வும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் விமான நிலையத்திற்கு செல்லும் முன் தங்களின் விமான நிலையை இணையத்தில் சரிபார்க்க வேண்டும் என்றும் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading