பிரான்ஸ் பிரதமர் பிரான்சுவா பைரு (François Bayrou) செப்டம்பர் 8 அன்று தேசிய சட்டமன்றத்தில் (Assemblée nationale) தனது அரசாங்கத்துக்கு நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பை நடத்த உள்ளார்.
இது தொடர்பாக அவர் முன்மொழிந்துள்ள €44 பில்லியன் செலவுக் குறைப்பு திட்டம் பல்வேறு கட்சிகளின் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. அந்தத் திட்டத்தில்:
- பொது விடுமுறை குறைப்பு
- நலத்திட்ட நிதி தணிக்கை
- புதிய வரிகள், வரி உயர்வுகள்
ஆகிய நடவடிக்கைகள் இடம்பெற உள்ளன.
ஆனால், வலது சாரி கட்சி Rassemblement National (RN), இடதுசாரி La France Insoumise (LFI), சமூகவாதிகள் (PS) உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் “நம்பிக்கை வாக்கில் ஆதரவு அளிக்கமாட்டோம்” என்று ஏற்கனவே அறிவித்துள்ளன.
இதனால், பைருவின் அரசு வீழ்ச்சி ஆபத்தில் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன. சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு தோல்வியடைந்தால், புதிய தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும், செப்டம்பர் 10-ஆம் தேதி நடைபெற உள்ள பொதுப் போராட்டம் அரசியல் நிலையை இன்னும் பதட்டமாக்கும் சூழல் உள்ளது.





Leave a Reply