கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இன்று (14) அதிகாலை, ரூ. 69.24 மில்லியன் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் இலங்கை விமானப் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 28 வயதுடைய ரம்புக்கணையைச் சேர்ந்த நபர் என பொலிஸார் தெரிவித்தனர். அவர் மலேசியாவின் குவாலாலம்பூரிலிருந்து எயர் ஏசியா AK-047 விமானத்தில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் இலங்கைக்கு வந்திருந்தார்.
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், சந்தேகநபரின் பயணப் பையில் போலியான அடித்தளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 308 கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சந்தேகநபர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பொலிஸார் தெரிவித்தனர்.





Leave a Reply