சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

சுமார் 1 கோடி 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற மூவர் விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் அளுத்கம,யட்டியந்தோட்டை மற்றும் மாவனெல்லை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள் என தெரியவந்துள்ளது.

குறித்த மூவரும் செவ்வாய்க்கிழமை (25) காலை துபாய் எமிரேட்ஸ் விமானமான EK-648 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அவர்களின் பயணப்பைகளை சோதனையிட்ட போது 119,000 “பிளாட்டினம்” சிகரெட்டுகள் அடங்கிய 595 அட்டைப்பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது மூவருக்கும் தலா 03 லட்சம் ரூபாய் மற்றும் 09 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த நீதவான் உத்தரவிட்டார்.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்