இலங்கையின் பல பகுதிகளில் 50 மில்லிமீட்டர் அளவை மீறும் அளவில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக சபரகமுவா, மத்திய, உவா மற்றும் வட மத்திய மாகாணங்களில் சில இடங்களில் இவ்வாறான கனமழை பதிவாகும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீவின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் நீர்ப்பெருக்கு மற்றும் வெள்ளப்பெருக்கு அபாயம் அதிகரிக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதே நேரத்தில், கடும் மழையுடன் கூடிய காற்று வீசும் வாய்ப்பும் உள்ளதால், மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் தொடர்பான அபாயங்களையும் கவனத்தில் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.





Leave a Reply