மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் மேகமூட்டமான வானிலை நிலவும் என்றும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய சேதங்களை தவிர்க்க மக்கள் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் சில நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையில் உள்ளதாகவும் பாதாளச்சரிவு அபாய எச்சரிக்கைகள் சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






























