Sri Lanka Police, அரசு வேலைவாய்ப்பு
இலங்கைக் காவல்துறை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு (STF) புதிய அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களின் இறுதி திகதி 2026 ஜூன் 1 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
2026 மார்ச் 27 ஆம் திகதியிடப்பட்ட அரசாங்க வர்த்தமானி இலக்கம் 2482 இன் அடிப்படையில் புதிய பொலிஸ் கொஸ்தாபல் பெண் பொலிஸ் கொஸ்தாபல் மற்றும் பொலிஸ் கொஸ்தாபல் சாரதி பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் 2026 மே 8 ஆம் திகதி வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 2026 மே 15 ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமானி இலக்கம் 2489 மூலம் அந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது ஏதேனும் தொழில்நுட்ப அல்லது பிற சிக்கல்கள் ஏற்பட்டால் விண்ணப்பதாரர்கள் பொலிஸ் ஆட்சேர்ப்புப் பிரிவின் 071-8591925, 011-2505202 மற்றும் 011-2552953 என்ற தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு மேலதிக தகவல்களை பெறலாம்.
விண்ணப்பிப்பதற்கு இங்கே கிளிக் செய்யவும்

நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியை படத்தில் காட்டியவாறு தெரிவு செய்த பின்னர் கீழே மொழியை தெரிவு செய்யுங்கள் அதன் பின்னர்

நான்கு கட்டங்களால் ஆன உங்களுடைய விண்ணப்ப படிவத்தை கேட்கப்பட்ட தரவுகளை சரியான முறையில் வழங்கி உண்மையான தகவல்களை உள்ளீடு செய்து பூர்த்தி செய்து அனுப்புங்கள்





Leave a Reply