சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளரும் புதிய மக்கள் முன்னணியின் தலைவருமான சுகீஸ்வர பண்டார, இரண்டு அரச நிறுவனங்களிலிருந்து ஒரே காலப்பகுதியில் சம்பளம் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையின் பேரில் இன்று (18) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அவரை இன்று பிற்பகல் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அரச சேவையுடன் தொடர்புடைய நிதி முறைகேடு மற்றும் நிர்வாக நடைமுறைகள் மீறப்பட்டுள்ளனவா என்பது குறித்து அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த வழக்கு அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் விசாரணைகளின் அடிப்படையில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்