சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

இலங்கை–அமெரிக்க உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் நாடு வந்துள்ள அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலாளர் அலிசன் ஹுக்கர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்து கடல்சார் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்.

கடந்த வாரம் அமெரிக்கா இலங்கைக்கு வழங்கிய கடல்சார் கண்காணிப்பு கப்பல் உள்ளிட்ட நடவடிக்கைகள், இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டதாக அமெரிக்க தூதர் ஜூலி சுங் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டார்.

இந்த ஒத்துழைப்புகள் இலங்கையின் இறையாண்மையை மதிக்கும் வகையிலும், இரு நாடுகளின் பொதுவான மூலோபாய நலன்களை முன்னிறுத்தும் வகையிலும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இலங்கையின் மீட்பு நடவடிக்கைகள் தொடரும் நிலையில் வர்த்தகம், முதலீடு, குறுகியகால பொருளாதார நிலைத் துறுதிப்பாடு போன்ற முக்கிய பொருளாதார முன்னுரிமைகள் குறித்தும் இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.

‘டிட்வா’ சூறாவளியால் உயிரிழந்தோருக்கு அமெரிக்க தரப்பு இரங்கல் தெரிவித்ததுடன், இலங்கையுடன் வலுவான இருதரப்பு உறவைத் தொடரும் தங்களது உறுதிப்பாட்டையும் மறுபடியும் வலியுறுத்தியது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்