சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

இலங்கை அரசு தனது குடிமக்களின் உரிமைகள் மற்றும் நலன்களை வலுப்படுத்தும் மாற்றுத் திருத்தங்களை உள்நாட்டு செயல்முறைகள் வழியே முன்னெடுத்து செல்லத் தீர்மானித்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையர் (UNHCHR) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள சர்வதேச தலையீடு குறித்த அழைப்புகளை நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில், இலங்கைக்கு தேவையான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு வெளிநாட்டு தலையீடுகள் இடையூறாக மட்டுமே அமையும் என்றும்  இதனால் மக்களிடையே பிளவு ஏற்படும் அபாயமும் உண்டு. ஆகவே சர்வதேச நடவடிக்கைகள் குறித்த உயர் ஆணையரின் பரிந்துரைகள் மற்றும் முடிவுகளை அரசு ஏற்கவில்லை  என்று வலியுறுத்தியுள்ளது.

மேலும், இன, மத, தரம், சாதி பேதங்களின்றி மக்களின் பல்துறை வேறுபாட்டை மதித்து கொண்டாடும் ஒரு தேசத்தை உருவாக்குவதற்கான உண்மையான அக்கறையும் பொறுப்பும் அரசுக்கு உண்டு என அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

இலங்கையில் இனவாதம் அல்லது தீவிரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு அரசாங்கம் இடமளிக்காது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்