சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

சவூதி அரேபியாவின் போக்குவரத்து துறை (Moroor) வாகன கண்ணாடிகளில் கருமை படிவம் (tinting) தொடர்பாக புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

இந்த விதிமுறைகள் சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் அமல்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து வாகன உரிமையாளர்களும் இந்த விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம் அத்துடன் வாகனங்கள் உரிமையாளர்களின் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்தாலும் முழுமையாக கருமை படிந்த கண்ணாடிகளுடன் இருந்தால் அவை கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளின்படி வாகனத்தின் மொத்த கண்ணாடி பகுதியின் 30%-க்கு அதிகமாக கருமை படியக் கூடாது மேலும், கருமை படிந்த கண்ணாடிகள் வெளிச்சம் ஊடுருவும் அளவிற்கு தெளிவாக இருக்க வேண்டும். வெளியில் இருந்து உள்ளே பார்ப்பதற்கு தடையில்லாமல் இருக்க வேண்டும்.

முன்புற கண்ணாடியில் (Front Windshield) கருமை படிவம் பயன்படுத்தப்படக் கூடாது ஏனெனில் இது பார்வை தடங்கலாகி விபத்துகளுக்கு வழிவகுக்கும். இந்த விதிகளை மீறினால் …

குறைந்தபட்சம் 500 முதல் அதிகபட்சம் 900 சவூதி ரியால் (SAR) வரை அபராதம் விதிக்கப்படும் மேலும் மீறலின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு அபராதத் தொகை நிர்ணயிக்கப்படும். மேலும் தொடர்ந்து விதிகளை மீறுபவர்கள் சிறை தண்டனைக்கு உள்ளாகவும் வாய்ப்புள்ளது.

இதனால் அனைத்து வாகன ஓட்டிகளும் இந்த விதிகளை கவனமாகக் கடைபிடிக்க வேண்டும். சட்டவிரோதமான கருமை படிவங்களை அகற்றி அபராதங்களை தவிர்த்து பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும்.
போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதன் மூலம் மட்டும் நமது பாதுகாப்பையும் மற்றவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியும்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading