பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குறைவான வருகை தருவதைக் குறிப்பிட்டு, பாராளுமன்றத்தில் விரல் ரேகை அடிப்படையிலான வருகை பதிவு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று எம்.பி. அச்சுனா ராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
“விரல் ரேகை அவசியம், ஆனால் முதலில் பாராளுமன்றத்திலிருந்து தொடங்குவோம். இன்று இங்கு எத்தனை எம்.பிக்கள் இருக்கிறார்கள் பாருங்கள். நாங்கள் மாதம் 3 லட்சம் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகிறோம். சிலர் 66 அமர்வுகளில் 25 முறை மட்டுமே வருகை தந்துள்ளனர்,” என அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், பாராளுமன்ற அமர்வுகளுக்காக கோடிக்கணக்கான தொகை செலவழிக்கப்படுவதாகவும், சிலர் அதில் பங்கேற்காமல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் கூறுகையில், பாராளுமன்ற அமர்வுகளுக்காக கோடிக்கணக்கான தொகை செலவழிக்கப்படுவதாகவும், சிலர் அதில் பங்கேற்காமல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், விரல் ரேகை அடிப்படையிலான வருகை பதிவு மருத்துவ துறை, காவல் துறை, சட்டத் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் கட்டாயமாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்றார்.
“நான் மருத்துவராக இருந்தபோது கூடுதல் நேரக் கட்டணம் பெற்றிருக்கிறேன், அதுபோல துணை அமைச்சரும் பெற்றிருப்பார். நீதிபதிகளுக்கு பொருந்தும் சட்டம் வழக்கறிஞர்களுக்கும் பொருந்த வேண்டும். மருத்துவமனை இயக்குநருக்கு பொருந்தும் சட்டம், சிறிய ஊழியர்களுக்கும் பொருந்த வேண்டும்,” என கூறிய அவர், அரசு இந்த விதியை அனைத்து துறைகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சவால் விடுத்தார்.





Leave a Reply