அம்பாறை மாவட்டத்தின் வலஸ்முல்லைப் பிரதேசத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த காணித் தகராறு காரணமாக அண்ணனை தம்பி தாக்கிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (01.06.2026) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 37 வயதுடைய குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். இரண்டு சகோதரர்களுக்கும் இடையே நீண்டகாலமாக காணித் தகராறு இருந்து வந்த நிலையில் நேற்று மாலை ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது.
இதன்போது ஆத்திரமடைந்த தம்பி, அண்ணன் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. படுகாயமடைந்த அண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் 34 வயதுடைய தம்பியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





Leave a Reply