ICC மகளிர் T20 உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி மிக முக்கியமான வெற்றியை பதிவு செய்து அரையிறுதி வாய்ப்பை இன்னும் உயிரோட்டமாக வைத்துள்ளது. கேப்டன் சமரி அதபத்து (Chamari Athapaththu) தனது அபாரமான ஆட்டத்தால் ரசிகர்களை கவர்ந்தார்.அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 130/5 ரன்கள் எடுத்தது. தொடக்கத்தில் இலங்கை பந்து வீச்சு அதிரடியாக செயல்பட்டு 18 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் வீழ்த்தியது. ஆனால் கேப்டன் காபி லூயிஸ் (Gaby Lewis) (59) மற்றும் லியா பால் (Leah Paul) இணைந்து 66 ரன்கள் கூட்டணி அமைத்து அணியை மீட்டனர்.
131 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை தொடக்கத்திலேயே ஆட்டத்தை கைப்பற்றியது. சமரி அதபத்து அதிரடி சதம் (106 ரன்கள், 61 பந்துகளில்) மூலம் போட்டியின் முழு திசையையும் மாற்றினார். 17 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கிய இந்த இன்னிங்ஸ் அயர்லாந்து பந்துவீச்சை முற்றிலும் சிதறடித்தது.இமேஷா துலானி (Imesha Dulani) உடன் இணைந்து 98 ரன்கள் தொடக்க கூட்டணி அமைத்த சமரி அதபத்து இலங்கையை 4.3 ஓவர்கள் மீதமிருக்க 9 விக்கெட் வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இந்த வெற்றியுடன் இலங்கை அணி 4 புள்ளிகள் பெற்று அரையிறுதிக்கான நம்பிக்கையைத் தொடர்ந்து வைத்துள்ளது. அடுத்த போட்டியில் ஸ்காட்லாந்து (Scotland) அணியை வீழ்த்தி மற்ற அணிகளின் முடிவுகளையும் எதிர்பார்க்க வேண்டியுள்ளது.அயர்லாந்து அணி இதுவரை உலகக்கோப்பை வரலாற்றில் 21 போட்டிகளிலும் வெற்றி பெறாத நிலையில் இன்னும் ஒரு போட்டி மட்டுமே அவர்களுக்கு மீதமுள்ளது.







Leave a Reply