இலங்கையில் நிலக்கரி கொள்முதல் தொடர்பான முறைகேடுகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தொடர்புடைய அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்களை பதிவு செய்ய அடுத்த செவ்வாய்க்கிழமை தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணை, கடந்த கால நிலக்கரி இறக்குமதி ஒப்பந்தங்களில் ஏற்பட்டதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத செயல்பாடுகளை ஆராய்வதற்காக முன்னெடுக்கப்படுகிறது.
மேலும், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களின் பொறுப்புகள் குறித்து தெளிவுபடுத்தும் நோக்கிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த ஆணைக்குழு, 2009ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த அனைத்து நிலக்கரி கொள்முதல் நடவடிக்கைகளையும் ஆய்வு செய்யும் அதிகாரத்துடன் செயல்பட்டு வருகிறது. அதேசமயம் பொதுமக்களிடமிருந்தும் தகவல்கள் பெறப்பட்டு வருகின்றன என்றும் முன்னர் நடைபெற்ற கணக்காய்வுகள் மற்றும் விசாரணைகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலக்கரி இறக்குமதி செயல்முறைகளில் ஏற்பட்டதாகக் கூறப்படும் குறைபாடுகள் தரமற்ற நிலக்கரி விநியோகம் மற்றும் அதனால் மின்சார உற்பத்தியில் ஏற்பட்ட பாதிப்புகள் ஆகியவற்றையும் இந்த ஆணைக்குழு ஆராய உள்ளது. விசாரணை முடிவில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





Leave a Reply