கண்டினென்டல் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் கனியாரச்ச்சிகே தேஷங்கர் சமிந்த டி சில்வா, லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளுக்கான விசாரணை ஆணைக்குழுவினரால் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர்மீது, அரச அனலிஸ்ட் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரி டி.எச்.எல்.டபிள்யூ. ஜயமன்னவுக்கு ரூ. 6,415,050 லஞ்சம் வழங்குவதற்கு உடந்தையாக செயல்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜயமன்ன முன்னதாகவே லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த லஞ்சப்பரிவர்த்தனையால் சம்பந்தப்பட்ட தனியார் காப்புறுதி நிறுவனத்திற்கு அநியாய நன்மை கிடைத்ததாகவும், சமிந்த டி சில்வா குற்றத்தைச் செய்ய உதவி மற்றும் ஆதரவு வழங்கியதாகவும் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விரைவில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading