சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

பல கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (17) காலை 8 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது.

2026 ஆம் நிதியாண்டு தொடர்பாக ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார சேவை மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு காணத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்கள் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய வைத்தியசாலை மருத்துவ பரிசோதனையின் போது வைத்தியசாலையில் கிடைக்காத மருந்துகளைப் பெற நோயாளிகளுக்கு மருந்துச் சீட்டுகளை வழங்காமை, ஆய்வக சோதனைகளை வெளிப்புறமாக நடத்த பரிந்துரைகளை வழங்காமை, தினசரி மருத்துவ பரிசோதனைகளை தவிர மேலதிகமான எந்தவொரு பரிசோதனையிலும் கலந்துகொள்ளாமை உள்ளிட்ட பல நடவடிக்கைகள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் அடங்கும்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading