மருத்துவ மற்றும் குடிமக்கள் உரிமை மருத்துவர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் சிறப்பு நிபுணர் டாக்டர் சாமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார், 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மிருக நலனுக்காக பெரும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் மருத்துவ பணியாளர்களுக்கான நிவாரணம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
“இந்த ஆண்டின் பட்ஜெட்டில் நாய்கள் உள்ளிட்ட மிருக நலனுக்காக மிகுந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இளம் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களை நாட்டில் தக்கவைத்து ஊக்குவிக்கும் வகையில் எந்த வித ஏற்பாடும் செய்யப்படவில்லை,” என டாக்டர் சஞ்சீவ கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது, “கிராமப்புற மருத்துவமனைகளிலிருந்து முதன்மை சிகிச்சை மையங்கள்வரை ஆயிரக்கணக்கான சுகாதார ஊழியர்கள் இரவு பகலாக உழைத்து, இலங்கையின் சுகாதாரக் குறியீடுகளை சர்வதேச மட்டத்தில் பேணுகின்றனர். ஆனால், இம்முறை அவர்களின் நலனுக்காக சிறிதளவு கூட கவனம் செலுத்தப்படாதது வருந்தத்தக்கது,” என்றார்.
மேலும், இலவச வாகன உரிமம் போன்ற ஊக்குவிப்புகளை வழங்குவது நாட்டிலிருந்து மருத்துவர்கள் வெளியேறுவதைத் தடுக்க உதவும் எனவும் டாக்டர் சஞ்சீவ தெரிவித்தார்.





Leave a Reply