சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

ஹொரணை பகுதியில் உள்ள அரச வங்கியொன்றில் 3 கோடியே 50 இலட்சம் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வங்கியின் உதவி மேலாளரும் பாதுகாப்பு அதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏடிஎம் இயந்திரங்களில் வைப்புச் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்ட பணப்பைகள் வங்கியின் பின்புறக் கதவின் அருகே பலவந்தமாக பறிக்கப்பட்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வங்கி ஊழியர்களின் தொடர்பு குறித்து சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். சம்பவத்துடன் தொடர்புடைய மற்றவர்களை கண்டறிவதற்கும் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீட்பதற்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்