மரீன் லெ பென்க்கு தடை நீக்கம், 2027 பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் ஏன் போட்டியிட முடியும் என நீதிமன்ற தீர்ப்பு
பிரான்ஸ் அரசியல் தலைவி மரீன் லெ பென் ஐரோப்பிய பாராளுமன்ற நிதி முறைகேடு வழக்கில் பாரிஸ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டிருந்தாலும் 2027 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்டத் தடையிலிருந்து தற்போதைக்கு விடுபட்டுள்ளார்.
காரணம் மரீன் லெ பென்க்கு தடை நீக்கம் 45 மாதங்களாக குறைக்கப்பட்டதுடன் அதில் 30 மாதங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 15 மாத தகுதி நீக்க காலம் ஏற்கனவே முடிந்ததாக கருதப்படுவதால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சட்ட ரீதியான தடையில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதில் 2 ஆண்டுகள் இடைநிறுத்தப்பட்ட தண்டனையாகவும் 1 ஆண்டு வீட்டு கண்காணிப்பு / மின்னணு கால் வளையம் மூலம் அனுபவிக்க வேண்டிய தண்டனையாகவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
France Tamil News, இதனால் சட்டப்படி அவர் வேட்பாளராக இருக்க முடிந்தாலும் மின்னணு கண்காணிப்புடன் தேர்தல் பிரசாரம் செய்வது அரசியல் ரீதியாக பெரிய சவாலாக இருக்கும்.










Leave a Reply