மேற்கு மெக்சிகோ நாட்டில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் குறைந்தது 11 பேர் உயிரிழந்ததுடன் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நயரிட் மாநிலத்தில் அமைந்துள்ள அமத்லான் டெ கான்யாஸ் பகுதியிற்கு அருகே இந்த விபத்து இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜலிஸ்கோ மாநிலத்திலிருந்து பொழுதுபோக்கு மையம் நோக்கி பயணித்த சுற்றுலா பேருந்து கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையிலிருந்து விலகி புரண்டதே இந்த விபத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
உடனடியாக அவசர மீட்பு குழுக்கள் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்தவர்களை வைத்தியசாலைகளுக்கு அனுப்பியதுடன் சாலையும் தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்த விபத்தின் காரணம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதுடன் விடுமுறை காலங்களில் அதிகரிக்கும் போக்குவரத்து காரணமாக சாலை பாதுகாப்பு குறித்து மீண்டும் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.







Leave a Reply