ஈரானின் முன்னாள் உயரிய தலைவரின் இறுதிச் சடங்கில் புதிய உச்ச தலைவராகக் கருதப்படும் மொஜ்தபா கமேனி பங்கேற்காததற்கு நாட்டில் நீடித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் முழுமையாக முடிவுக்கு வராத போர் சூழலே முக்கிய காரணம் என தெஹ்ரான் பல்கலைக்கழக ஆராய்ச்சி அறிஞர் முகமது இஸ்லாமி தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே தற்போது மிகவும் பலவீனமான போர் நிறுத்தம் மட்டுமே அமலில் இருப்பதாகவும் பல சிக்கலான விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
இந்நிலையில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக மொஜ்தபா கமேனி பொதுவெளியில் தோன்றுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் ஹோர்முஸ் நீரிணை மற்றும் பாப் அல்-மண்டேப் நீரிணையை மையமாகக் கொண்ட புதிய பிராந்திய பாதுகாப்பு மற்றும் மூலோபாயக் கொள்கையை ஈரானிய தலைமை வடிவமைத்து வருவதாகவும் தற்போதைய அரசாங்கம் எதிர்ப்பை எதிர்கொள்வதை விட தனது ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை ஹிஸ்புல்லா அமைப்பிற்கு ஆதரவு வழங்குவதும் இஸ்ரேலிய தாக்குதல்களின் பின்னணியில் லெபனானின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் ஈரானின் தற்போதைய வெளிநாட்டு கொள்கை முன்னுரிமைகளில் முக்கிய இடம் வகிப்பதாக முகமது இஸ்லாமி தெரிவித்துள்ளார்.








Leave a Reply