மாலத்தீவின் தனிச்சார் பொருளாதார வலயத்தில் அனுமதியின்றி நுழைந்திருந்த இலங்கை மீன்பிடி கப்பல் ‘அவிஷ்கா புத’ (Avishka Putha) யில் இருந்து பெருமளவு போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாலத்தீவு காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிக்கையில், மொத்தம் 355.9 கிலோகிராம் அளவிலான சந்தேகத்துக்குரிய போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 5 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் வயது முறையே 39, 42, 28, 34 மற்றும் 63 ஆகும்.
கப்பலில் இருந்த 24 மூட்டைகளில் சுமார் 58.6 கிலோ ஹெராயின் மற்றும் 297.3 கிலோ ‘ஐஸ்’ போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.
கடந்த 7ஆம் தேதி (வெள்ளிக்கிழமை), மாலத்தீவு கடற்படை (MNDF Coast Guard) இக்கப்பலை கைப்பற்றியது. பின்னர் 9ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), கப்பலும் அதன் குழுவினரும் மேலதிக விசாரணைக்காக மாலத்தீவு காவல்துறைக்கு ஒப்படைக்கப்பட்டனர்.






Leave a Reply