சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

அக்டோபர் 8 2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வழியாகப் பயணித்த பயணிகள் எண்ணிக்கை கடந்த ஆண்டின் அதே காலத்துடன் ஒப்பிடுகையில் 14 சதவீதம் அதிகரித்துள்ளது என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகம் மற்றும் சிவில் விமான நிறுவனங்கள் அமைச்சகம் அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் (5,837,351) பயணிகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், 2025 ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில்( 6,630,728) பயணிகள் விமான நிலையத்தைப் பயன்படுத்தியுள்ளனர். இது மொத்தத்தில் 13.59 %(சதவீத) வளர்ச்சியை குறிக்கிறது.

அவற்றில் ஆகஸ்ட் மாதம் பயணிகள் எண்ணிக்கையில் அதிகபட்சம் பதிவு செய்யப்பட்டது அந்த மாதத்தில் மட்டும்( 922,993 பேர்) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வழியாகப் பயணித்துள்ளனர் என்பது தெரியவருகின்றது.

விமான நிலைய அதிகாரிகளும் விமான நிறுவனங்களும் தெரிவித்ததாவது
வரவிருக்கும் சுற்றுலா சீசனை முன்னிட்டு விமான சேவைகளுக்கான தேவை அதிகரித்து வருவதாகவும் அடுத்த சில மாதங்களில் பயணிகள் வருகை மேலும் உயரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த வளர்ச்சி நாட்டின் சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து துறைகளில் நேர்மறையான முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஊடகத் துறை
போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகம் மற்றும் சிவில் விமான நிறுவனங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading