இந்தத் திட்டம், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) மற்றும் இலங்கை அரசாங்கம் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்பட்டதாகும். இது, 2019 அக்டோபரில் அமைச்சரவை அங்கீகாரம் பெற்ற தேசிய கழிவு மேலாண்மை கொள்கைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து தொடர்புடைய தரப்புகளுடனும் ஒருங்கிணைந்து, கழிவுகளை சேகரித்தல், சிகிச்சையளித்தல் மற்றும் அகற்றுதல் ஆகியவற்றை பாதுகாப்பான, நிலைத்தன்மை வாய்ந்த மற்றும் சுற்றுச்சூழல் நட்பான முறையில் நடைமுறைப்படுத்தும் நோக்குடன் இந்த மாஸ்டர் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவு, பொது நிர்வாகம், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சரால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.





























