430 மின்சார மோட்டார் சைக்கிள்கள் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கையின் மீன்பிடித்துறையில் பணியாற்றும் களநிலை அதிகாரிகளின் பணித்திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் 430 மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கடற்றொழில் நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சின் கீழ் செயல்படும் கடற்றொழில் திணைக்களம் தேசிய நீரியல் வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை (NAQDA) மற்றும் தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (NARA) ஆகியவற்றின் களநிலை அதிகாரிகள் மற்றும் ஆராய்ச்சி உதவியாளர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடையவுள்ளனர்.
மேலும் பல தகவல்களுக்கு நமது பிரத்தியோக செய்தி தளத்தினை நாடுங்கள்
430 மின்சார மோட்டார் சைக்கிள்கள், களப்பணிகளை தடையின்றி விரைவாகவும் திறம்படவும் முன்னெடுக்க தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்குவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இத்திட்டத்திற்காக இந்திய அரசு ரூ. 264.59 மில்லியனை முழுமையான நன்கொடையாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. 2026 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இத்திட்டத்திற்காக இந்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் யோசனைக்கு கடற்றொழில் நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை உத்தியோகபூர்வ அங்கீகாரம் வழங்கியுள்ளது.





Leave a Reply