இத்தாலியின் மோடேனா நகரில் மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னர் பிரதமர் Giorgia Meloni தனது வெளிநாட்டு சந்திப்புகளை ரத்து செய்து அவசரமாக சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளார். இந்த சம்பவத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் நால்வரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன. 31 வயதுடைய சலீம் எல் கௌத்ரி என்ற நபர் நகர மையத்தில் திடீரென காரை மக்கள் மீது செலுத்தியதாகவும் பின்னர் தப்பிச் செல்ல முயன்றபோது கத்தியுடன் ஒருவரை தாக்க முயன்றதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
தாக்குதலின் நோக்கம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதுடன் இது திட்டமிட்ட தாக்குதலா அல்லது மனநலப் பிரச்சினையால் ஏற்பட்டதா என்பது ஆய்வு செய்யப்படுகிறது. மோடேனா நகர மேயர் இந்த சம்பவத்தை “மிகவும் அதிர்ச்சியூட்டும் தாக்குதல்” என வர்ணித்துள்ளார். பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் தைரியமாக செயல்பட்டு சந்தேகநபரை பிடித்ததாகவும் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். இந்த சம்பவம் இத்தாலி முழுவதும் பாதுகாப்பு தொடர்பான கவலைகளை அதிகரித்துள்ள நிலையில் பிரதமர் மெலோனி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.





Leave a Reply