ஜெர்மனியின் Leipzig நகர மையப் பகுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தில், ஒரு கார் மக்கள் கூட்டத்திற்குள் பாய்ந்ததில் 2 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நகரின் பரபரப்பான ஷாப்பிங் பகுதியான Grimmaische Strabe பகுதியில் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போலீசார் வழங்கிய தகவலின்படி, சம்பவத்தில் மேலும் சிலர் கடுமையாக காயமடைந்துள்ளனர். கார் ஓட்டியவர் 33 வயதுடைய ஜெர்மன் நபராக இருப்பதாகவும், சம்பவ இடத்திலேயே அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது பொதுமக்களுக்கு எந்தவித அபாயமும் இல்லை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
சம்பவம் “மாஸ் காஸுவால்டி” (mass casualty) நிலையாக அறிவிக்கப்பட்டதுடன், அவசர சேவை அணிகள் பெருமளவில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். சாட்சிகள் தெரிவித்ததாவது, வேகமாக வந்த வாகனம் பாதசாரிகள் நிறைந்த பகுதிக்குள் நுழைந்து பலரை மோதியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலின் நோக்கம் குறித்து இதுவரை தெளிவான தகவல் இல்லை என்றும், சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் லெய்ப்சிக் நகர மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.









Leave a Reply