இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ரெட் கோட்டை (Red Fort) அருகே இடம்பெற்ற கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இலங்கை அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தனது ‘X’ பதிவில்,
“இன்றைய டெல்லி வெடிப்பு சம்பவ செய்தி மிகவும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்திய மக்களுடன் இலங்கை ஒற்றுமையுடன் நிற்கிறது. பாதிக்கப்பட்ட அனைவரிடமும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்,”
என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது இரங்கல் பதிவில்,
“டெல்லியில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. பயங்கரவாதத்தை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இணைந்துள்ளன,”
என்று தெரிவித்துள்ளார்.
இந்த வெடிப்பில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர். இது தற்போது பயங்கரவாதத் தாக்குதல் என இந்திய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்த வெடிப்பு சம்பவம் நடைபெறுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன் ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறைகள் இணைந்து, பரிதாபாத் பகுதியில் உள்ள இரண்டு வீடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோ வெடிமருந்துகளும் ஆயுதங்களும் கைப்பற்றியிருந்தனர்.
இந்த இரண்டு சம்பவங்களுக்கிடையில் தொடர்பு இருப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெடிப்பு ஏற்பட்ட கார் தென் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவரின் சொந்தமானது என்றும், அவர் இந்த “வெள்ளை காலர் பயங்கரவாத குழுவில்” உறுப்பினராக இருந்தார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.





Leave a Reply