நுகேகொடையில் இன்று (21) கூட்டு எதிர்க்கட்சிகளின் மக்கள் பேரணி ஆரம்பமாகியுள்ளது. தேசிய மக்கள் சக்தி (NPP) அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து நடத்தப்படும் முதல் முக்கிய எதிர்ப்புப் பேரணியாக இது கருதப்படுகிறது.
அதிகாலை முதலே பல பிரதேசங்களைச் சேர்ந்த ஆதரவாளர்கள் நுகேகொடை பகுதியை நோக்கி திரண்டு வந்து, பேரணியில் கலந்துகொண்டனர். மக்கள் திரளுடன் நடைபெறும் இந்தப் போராட்டம் எதிர்க்கட்சிகளின் புதிய அரசியல் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், முக்கிய எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (SJB) இந்த பேரணியில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று அறிவித்துள்ளது.
பேரணி தற்போது அமைப்பாளர்களின் தலைமையில் முன்னெடுக்கப்படுகின்றது.





Leave a Reply