கொக்கி குமார் மரணம், பிரான்சில் தமிழ்த் தேசியப் பற்றாளராகச் செயற்பட்டு வந்ததுடன் சமூக ஊடகங்களில் கொக்கி குமார் என அறியப்பட்ட அழகேந்திரராசா சுஜித் அவர்களின் மரணம் தொடர்பான தகவல் தமிழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத்தினருக்கு கிடைத்த தகவல்களின் படி அவர் 2026 ஜூன் 28 ஆம் தேதி உயிரிழந்த நிலையில் இருந்ததாகவும் அவரது உடல் 2026 ஜூன் 29 ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரின் தகவலின் பின்னரே இந்த சம்பவம் தொடர்பான தகவல் குடும்பத்தினருக்கு அதிகாரப்பூர்வமாக தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதுவரை அவரது மரணத்திற்கான உத்தியோகபூர்வ காரணம் வெளியிடப்படவில்லை. காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ள தகவலின்படி 2026 ஜூலை 2 ஆம் தேதி நடைபெறவுள்ள விசாரணையின் பின்னர் மேலதிக தகவல்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்தச் சம்பவம் கொலையா தற்கொலையா அல்லது இயற்கை மரணமா ? என்ற கோணங்களிலும் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விசாரணை நிறைவடையும் வரை மரணத்திற்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.
அழகேந்திரராசா சுஜித் அவர்களின் மறைவு தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களிலும் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.










Leave a Reply