பாலஸ்தீனப் பிரதேசங்களில் இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தால் காசா பகுதியில் உள்ள தனது ஆயுதங்களை பாலஸ்தீன அதிகாரியிடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக ஹமாஸ் சனிக்கிழமை அறிவித்துள்ளது.
“எங்கள் ஆயுதங்கள் ஆக்கிரமிப்பின் இருப்புடன் தொடர்புடையவை. ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தால், இந்த ஆயுதங்கள் அரசின் அதிகாரத்தின் கீழ் வைக்கப்படும்,” என்று ஹமாஸ் தலைமை பேச்சுவார்த்தையாளரும் காசா தலைவருமான கலீல் அல்-ஹயா கூறினார். அவர் குறிப்பிட்டது இது முழுமையான இறையாண்மை மற்றும் சுதந்திரமான பாலஸ்தீன அரசின் உருவாக்கத்தை குறிக்கிறது என அவரது அலுவலகம் விளக்கியது.
மேலும் காசாவில் போர்நிறுத்தம் நடைமுறைக்கு வரும் என்பதை கண்காணிக்கும் மற்றும் எல்லைகளை மேற்பார்வை செய்யும் வகையில் ஐ.நா. பிரிவு படைகளைப் பயன்படுத்துவதை தாம் ஏற்றுக்கொள்ளத் தயாராக ள்ளதாக அல்-ஹயா தெரிவித்தார். ஆனால், காசாவை முழுமையாக நிராயுதபாணியாக்குவதற்கான சர்வதேச முயற்சிகளை தனது அமைப்பு ஏற்க முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.





Leave a Reply