ஹட்டனில் டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட 65 குடும்பங்கள் தோட்ட முகாமையாளர், பிரதேச செயலாளர் மற்றும் கட்டட ஆராய்ச்சி நிறுவனத் தலைவருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாடு விவரம்
ஸ்டொக்கம் தோட்டத்தை சேர்ந்த 65 குடும்பங்கள், வெடிப்பு மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக வெளியேறுமாறு கிராமச் சேவர்கள் மற்றும் பிரதேச செயலாளர் அறிவுறுத்தியதன் பேரில் ஸ்டொக்கம் தமிழ் வித்தியாலயத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
முறைபாட்டாளர்கள் எந்தவித தீர்வும் வழங்கப்படாத நிலையில், மீண்டும் வீடுகளில் குடியேறுமாறு அதிகாரிகள் கூறுவதற்கு எதிராக இந்த முறைப்பாடு கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோட்ட நிர்வாகத்தின் அலட்சியம்
முறைபாட்டாளர்கள் கூறியதாவது: கடந்த காலங்களில் ஏற்பட்ட கடும் மழையால் வீடுகளில் வெடிப்பு ஏற்பட்டதால் வெளியேறியோம். ஆனால் தற்போது முகாமில் இருந்து வெளியேறுமாறு கூறுகிறார்கள். கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினர்கள் ஆய்வு மேற்கொண்டு மண்சரிவு ஏற்படாது என தெரிவித்திருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்கள் தீர்வு பெறவில்லை.
பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளனர்:
“நாங்கள் இலங்கை பிரஜை இல்லையா? நாங்கள் இந்த நாட்டு ஜனாதிபதிக்கு வாக்களிக்கவில்லையா? ஏன் எங்களுக்கு மாத்திரம் வேறொரு சட்டம்? எங்களுடைய முழு பொறுப்பையும் கிராமச் சேவகர் மற்றும் பிரதேச செயலாளர் ஏற்க வேண்டும்.”
இந்த முறைப்பாடு மூலம், பாதிக்கப்பட்ட மக்கள் மீட்பு, பாதுகாப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் சமத்துவத்தை பெற கோருகின்றனர்.





Leave a Reply