அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் பதற்ற நிலையை சமாளிக்க பல்வேறு நாடுகள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் பின்னணியில் தீவிர இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்த அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெறும் இந்த முயற்சிகளில் Donald Trump நிர்வாகத்தின் சிறப்பு தூதர்கள் முக்கிய பங்காற்றுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் சார்பில் Steve Witkoff மற்றும் Jared Kushner ஆகியோர் நேரடி மற்றும் மறைமுக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தான் உள்ளிட்ட பிராந்திய சக்திகள் நடுவர் பங்காற்றி வருகின்றன. மேலும் Emmanuel Macron, ஈரான் ஜனாதிபதி Masoud Pezeshkian உடன் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு மற்றும் கடல் போக்குவரத்து தொடர்பாக நேரடி ஆலோசனைகள் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை சீனாவும் அமைதி முயற்சிகளில் தலையிட்டு ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரானை வலியுறுத்தியுள்ளது. இந்த இராஜதந்திர முயற்சிகள் வெற்றி பெற்றால் மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்றம் குறையக்கூடும் என சர்வதேச அரசியல் வட்டாரங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.





Leave a Reply