சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில் ஈராகில் நடந்த ட்ரோன் தாக்குதலில் ஒரு பிரெஞ்சு படைவீரர் உயிரிழந்த சம்பவத்தை Emmanuel Macron கடுமையாக கண்டித்துள்ளார். இந்த தாக்குதல் “முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று அவர் தெரிவித்தார்.

சம்பவம் குறித்து முழுமையான ராணுவ விசாரணை மற்றும் பாதுகாப்பு ஆய்வை உடனடியாக நடத்துமாறு அவர் பிரான்ஸ் ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்த தாக்குதல் எவ்வாறு நடந்தது பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததா எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை எப்படி தடுப்பது போன்ற விஷயங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மத்திய கிழக்கில் பிரான்ஸ் எந்த தாக்குதல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும், அதன் ராணுவ நிலைபாடு “தற்காப்பு” நோக்கத்திலேயே இருப்பதாக மக்ரோன் தெரிவித்துள்ளார். தற்போது Iran தொடர்பான போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அந்த போர் காரணமாக பிரான்ஸ் படைகளை தாக்குவது நியாயமானதல்ல என்றும் அவர் கூறினார். இந்த சம்பவம் மத்திய கிழக்கில் பணியாற்றும் வெளிநாட்டு படைகளின் பாதுகாப்பு குறித்து புதிய கவலைகளை எழுப்பியுள்ளது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading