தேசிய சட்டசபை புதன்கிழமை ஓய்வூதியச் சீர்திருத்தத்தை இடைநிறுத்த தீர்மானித்திருந்தாலும் CGT தலைவர் சோபி பினேட் டிசம்பர் 2 ஆம் தேதி வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

சமூக பாதுகாப்பு பட்ஜெட் “இத்தனை மோசமாக இருந்ததே இல்லை” என அவர் விளக்கி அதை முழுமையாக மறுசீரமைக்க தேவையுள்ளதாக தெரிவித்தார்.
அதே நாளில் சாலிடேர்ஸ் மற்றும் FSU தொழிற்சங்கங்களும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. “டிசம்பர் 2 அன்று பட்ஜெட் விவாதங்கள் முடிவெடுக்கும் கட்டத்தை அடையும்,” என சோபி பினேட் கூறினார். சோசியலிஸ்டுகளின் கோரிக்கைக்கு இணங்க, லெகோர்நு அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தவிர்க்க ஓய்வூதியச் சீர்திருத்தத்தை தற்காலிகமாக நிறுத்தும் முடிவு முதல் வாசிப்பில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் இது போதுமானதல்ல என CGT தலைவர் தெரிவித்தார். “நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை மசோதாவிற்கு திருத்தம் செய்ய வேண்டுமென கோருகிறோம்,” எனவும், முன்மொழியப்படும் மாற்றம் ஓய்வுபெறும் வயது 64 ஆகும் நடைமுறையை வெறும் ஒரு ஆண்டுக்குத் தள்ளுவது மட்டுமே எனவும் அவர் குறிப்பிட்டார். CFDT பொதுச்செயலாளர் மெரிலிஸ் லியோன் சீர்திருத்தத்தை இடைநிறுத்த ஆதரவாக வாக்களிக்க வேண்டுமென கேட்டிருந்தாலும் “நாங்கள் எந்தவித வாக்குறுதியையும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கொடுக்கவில்லை” என சோபி பினேட் தெரிவித்துள்ளார்.





Leave a Reply