உக்ரைனின் பல பகுதிகளில் ரஷ்யா நடத்திய புதிய தாக்குதல்களில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல்கள் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் Volodymyr Zelenskyy ரஷ்யாவின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து சர்வதேச சமூகம் மேலும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ச்சியான இந்த தாக்குதல்கள் நாட்டின் பாதுகாப்பு நிலையை மேலும் பதற்றமடையச் செய்துள்ளதுடன் பொதுமக்கள் வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த மோதல் நீடித்து வருவதால் அமைதிக்கான முயற்சிகள் இன்னும் சவாலாகவே இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்





Leave a Reply