திருகோணமலை கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (16) காலை அனுமதி பெறப்படாமல் பௌத்த வணக்கஸ்தலம் ஒன்றை அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள திணைக்களத்தின் தலையீட்டையடுத்து பொலிஸார் அதனை தற்காலிகமாக இடைநிறுத்தினர்.

அதன்போது அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையும் அதிகாரிகளால் அகற்றப்பட்டது.

எனினும், அகற்றப்பட்டிருந்த அந்த புத்தர் சிலை திங்கட்கிழமை (17) பிற்பகல் 1.30 மணியளவில் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் கோட்டநாயகம், கடலோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Contact NS (Nerikkalam.Info)

வணக்கம்
உங்களுடைய அவசர தேவை கருதி நீங்கள் நிரோஷ் சந்துருவை தொடர்புகொள்ள விரும்புகிறீர்கள்,

Nirosh_Santhuru

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading