“அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே மேடைக்குக் கொண்டு வருவோம்”: உதய கம்மன்பில உறுதி!
சமகி ஜன பலவெகய (SJB) உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளையும் விரைவில் ஒரே மேடைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிவிதுரு ஹெல உருமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
(21) நுகேகொடையில் நடைபெற்ற ‘மஹா ஜன ஹந்த’ (மக்களின் குரல்) எதிர்க்கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
🗣️ உதய கம்மன்பிலவின் கருத்துக்கள்
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த உதய கம்மன்பில பின்வருமாறு கூறினார்:
“ஜனாதிபதி நேற்று (20) தங்காலை கூட்டத்தில், நுகேகொடை கூட்டத்தை குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்காகவே நடத்துவதாக கூறினார். என்ன இது அபத்தமான கதை? நுகேகொடை பேரணியில் யாராவது போதைப்பொருளுக்கு ஆதரவாகப் பேசினார்களா? இந்த அரசாங்கம் இப்போது பயந்து, எதிர்க்கட்சி எழுப்பும் ஒவ்வொரு போராட்டத்திற்கும் ‘போதைப்பொருளுக்கு ஆதரவானது’ என்று குற்றம் சாட்டுகிறது. இந்த குற்றச்சாட்டுகளை மக்கள் இப்போது பொருட்படுத்துவதில்லை.”
“ஜனாதிபதி கூறிய பொய்களின் தொகுப்பை மக்கள் நன்றாக அறிவார்கள். அதனால் மக்கள் இப்போது இந்த அரசாங்கத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள். ஜனாதிபதி கூறிய பொய்கள் கணிசமான அளவில் உள்ளன. பதினான்கு மாதங்களாக பொய் சொன்னார். மேலும் ஒரு பதினான்கு மாத காலத்தை உங்களுக்குத் தருகிறோம்.”
“இந்த பொய்களுக்காக ஜனாதிபதி அவர்கள் மெதமுலனவுக்குச் சென்று மஹிந்த ராஜபக்ஷவிடம் தலைவணங்கி மன்னிப்புக் கேட்குமாறு நாங்கள் சொல்கிறோம். அத்துடன், அவர் செய்த இந்த பொய்களுக்காக தேசத்திடமே மன்னிப்புக் கேட்குமாறு நாங்கள் ஜனாதிபதியிடம் கூறுகிறோம்,” என்று உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார்.





Leave a Reply