சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

யாழ்ப்பாணம் தீவகப் பகுதியில் மாடுகளை களவாடி சட்டவிரோதமாக இறைச்சியாக்குதல் மற்றும் வீடுகளை உடைத்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 07 பேரை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வேலணை, புங்குடுதீவு மற்றும் அல்லைப்பிட்டி பகுதிகளில் அண்மைக் காலமாக மாடுகள் களவாடப்பட்டு சட்டவிரோதமாக இறைச்சியாக்கப்பட்ட சம்பவங்களும், வீடுகளை உடைத்து நகை மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவங்களும் அதிகரித்திருந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்களில் பிரதான சந்தேகநபரிடமிருந்து 2300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்