வவுனியா – ஓமந்தைப் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் மாட்டுடன் மோதி கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதியதில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்துள்ளார். யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி திடீரென வீதியை குறுக்கே கடந்த மாட்டுடன் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி எதிர்திசையில் வந்த டிப்பர் வாகனத்துடனும் மோதியதில் பலத்த சேதமடைந்தது. விபத்தில் கடுமையாக காயமடைந்த சாரதி மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகன சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஓமந்தைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்





Leave a Reply