சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

பேரவை (பிரதிநிதிகள் சபை) 2024 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கோரிக்கையின் பேரில், பள்ளிகளில் குழந்தைகள் தலைகவசம் (ஹெட்ஸ்கார்ஃப்) அணிவதைத் தடை செய்யும் வாய்ப்பை அரசு ஆய்வு செய்தது. ஆனால் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இது மாநில (காண்டன்) அரசுகளின் அதிகார வரம்புக்குள் வரும் விஷயம் என அரசாங்கம் விளக்கியது.

முன்பு சில காண்டன் நிர்வாகங்கள் பள்ளி மாணவிகளுக்கான தலைக்கவசத் தடை உத்தரவை வெளியிட்டிருந்தன. இதன் அடிப்படையில், 2015 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து உச்சநீதிமன்றம் (ஃபெடரல் உச்ச நீதிமன்றம்) முக்கியமான தீர்ப்பொன்றை வழங்கியது. அந்த தீர்ப்பில் அரசு பள்ளிகளில் குழந்தைகள் தலைகவசம் அணிவதை பொதுவாக தடை செய்வது அரசியலமைப்புக்கு முரணானது என கூறப்பட்டது.

மேலும் அரசு மற்றும் அதன் கல்வி நிறுவனங்கள் மதச் சின்னங்கள் தொடர்பாக நடுநிலையாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இதனாலேயே பள்ளிகளில் குழந்தைகள் தலை கவசம் அணிவதை முழுமையாக தடை செய்யும் பொது விதிக்கு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மொத்தத்தில் அரசு மதச் சுதந்திரத்தையும் மதிக்கும் நோக்கில், குழந்தைகளுக்கான தலைக்கவசத் தடை தேவையில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading