சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

ஈரான் போர் – பலவீனமடைந்த ஒட்டுமொத்த கட்டமைப்புக்கள்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடன் நடைபெற்ற சுமார் 40 நாள் போருக்குப் பிறகு ஈரான் மிகப்பெரிய பொருளாதார இழப்பும் உட்கட்டமைப்பு சேதமும் சந்தித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த போரின் விளைவாக தொழிற்சாலைகள், மின் நிலையங்கள், போக்குவரத்து அமைப்புகள் மற்றும் முக்கிய தொழில் துறைகள் கடுமையாக சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

மொத்தமாக சுமார் 145 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. போரினால் நாட்டின் பொருளாதாரம் பலவீனமடைந்து வேலை இழப்பு அதிகரித்ததுடன் விலைவாசி உயர்வு மக்களின் வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது.

பல நிறுவனங்கள் செயல்பாட்டை நிறுத்தியதால் ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சில பகுதிகளில் முக்கிய எரிசக்தி மற்றும் தொழில் தளங்கள் சேதமடைந்ததால் மீட்பு பணிகள் நீண்ட காலம் எடுக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த போர் முடிவடைந்த பின்னரும் ஈரான் பொருளாதார சிக்கல்கள் சர்வதேச தடைகள் மற்றும் வர்த்தக பாதிப்புகள் காரணமாக நீண்டகால சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மதிப்பீடுகள் கூறுகின்றன.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading