லெபனானின் முக்கியமான லிட்டானி ஆற்றுப் பகுதியில் இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொல்லா அமைப்புக்கிடையிலான மோதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. இரவு முழுவதும் நடைபெற்ற வான்தாக்குதல்களுக்கு பின்னர் தெற்கு லெபனானிலும் பெக்கா பள்ளத்தாக்கு பகுதிகளிலும் இஸ்ரேல் பல தாக்குதல்களை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிழக்கு லெபனானின் மஷ்கரா கிராமத்தில் நடந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் உட்பட குறைந்தது 12 பேர் உயிரிழந்ததாக லெபனான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஹெஸ்பொல்லா தளங்கள் மற்றும் இராணுவ உள்கட்டமைப்புகளையே குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தரப்பு கூறியுள்ள நிலையில் பதிலடி நடவடிக்கையாக ஹெஸ்பொல்லா ராக்கெட் ட்ரோன் மற்றும் பீரங்கி தாக்குதல்களை முன்னெடுத்ததாக அறிவித்துள்ளது. இதற்கிடையில் “ஹெஸ்பொல்லா அச்சுறுத்தலை தடுக்க தாக்குதல்கள் மேலும் அதிகரிக்கப்படும்” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அமெரிக்கா நடத்திய சமாதான முயற்சிகள் தொடர்ந்தாலும் எல்லைப் பகுதிகளில் பதற்றம் குறையாமல் இருப்பதால் பொதுமக்கள் மத்தியில் அச்சநிலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.





Leave a Reply