Gare de Lyon ரயில் நிலையம் ஏப்ரல் 30 – மே 3 வரை மூடப்படவுள்ளது.
பாரிஸ் நகரில் உள்ள முக்கிய ரயில் நிலையமான லியோன் நவீனமயமாக்கல் பணிகள் காரணமாக 2026 ஏப்ரல் 30 ஆம் தேதி இரவு 8:30 மணி முதல் மே 3 ஆம் தேதி மதியம் வரை முழுமையாக மூடப்பட உள்ளது.
இந்த காலகட்டத்தில் சிக்னல் அமைப்புகளை புதுப்பிக்கும் பெரிய அளவிலான தொழில்நுட்ப பணிகள் நடைபெற உள்ளதால் அந்த நிலையத்தில் இருந்து எந்த ரயிலும் புறப்படவோ வரவோ முடியாது. இதில் TGV INOUI மற்றும் Lyria போன்ற நீண்ட தூர சேவைகளும் பாதிக்கப்படும்.
இந்த மூடலின் தாக்கம் Île-de-France பிராந்திய ரயில் சேவைகளிலும் பெரிதாக இருக்கும். குறிப்பாக RER D பாதையின் பல பகுதிகள் பாரிஸ் மற்றும் தெற்கு புறநகர் பகுதிகளுக்கிடையே இடைநிறுத்தப்படும்.
அதேபோல் Transilien R வரிசையில் பாரிஸ் முதல் மெலன் (Melun) வரை ரயில்கள் இயங்காது. இந்த இடையூறுகள் அனைத்தும் Gare de Lyon நிலையத்தில் உள்ள பழைய சிக்னல் அமைப்புகள் மாற்றப்படுவதால் ஏற்படுகின்றன.
அதிக நம்பகத்தன்மை மற்றும் நேர்த்தியான சேவையை வழங்கும் நோக்கில் 1980 மற்றும் 1990களில் அமைக்கப்பட்ட பழைய கட்டுப்பாட்டு அமைப்புகள் அகற்றப்பட்டு புதிய கணினி அடிப்படையிலான சிக்னல் அமைப்புகள் நிறுவப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடவும் மாற்று பாதைகள் மற்றும் நேரங்களை சரிபார்க்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.





Leave a Reply