சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

பிரான்ஸ் சமூக பாதுகாப்பு நிதி மசோதாவில் (PLFSS) பெண்களுக்கு ஓய்வூதிய கணக்கில் இரண்டு முக்கிய நன்மைகள் சேர்க்கப்பட்டுள்ளன. குடும்பப் பொறுப்புகள் காரணமாக பெண்கள் எதிர்கொள்ளும் வேலை இடைவெளி மற்றும் வருமானக் குறைபாடுகளை ஈடு செய்யும் நோக்கில் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன.

முதலாவது, குழந்தை பிறந்ததற்கான கூடுதல் காலாண்டு கிரெடிட்கள் (trimestres) இனிமேல் முன்கூட்டியே ஓய்வு பெற பயன்படுத்த முடியும். பெண்கள் குழந்தை காரணமாக பெற்றிருக்கும் இந்த காலாண்டுகளில் இருந்து அதிகபட்சம் 2 காலாண்டுகள் வரை, நீண்ட தொழில் (long career) திட்டத்தின் கீழ் முன்கூட்டியே ஓய்வு பெற விண்ணப்பிக்கலாம். இதன் மூலம், தாய்மையின் காரணமாக வேலை வாழ்க்கையில் ஏற்பட்ட இடைவெளி அவர்களின் ஓய்வூதியம் பெறும் வயதுக்கு பாதிப்பில்லாமல் இருக்கும்.

இரண்டாவது மாற்றம் ஓய்வூதியம் கணக்கிடும் ஆண்டுகளுக்குச் சம்பந்தமானது. சாதாரணமாக, ஓய்வூதியத் தொகை ஒருவர் சம்பளம் பெற்ற சிறந்த 25 ஆண்டுகள் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஆனால் குடும்பப் பொறுப்புகளை மேற்கொள்ளும் பெண்களுக்கான சலுகையாக இந்த கணக்கிடும் ஆண்டுகள் குறைக்கப்படுகிறது

  • ஒரு குழந்தை பெற்ற பெண்களுக்கு: 25 ஆண்டுகள் இலிருந்து 24 ஆண்டுகள்
  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்ற பெண்களுக்கு: 25 ஆண்டுகள் இலிருந்து 23 ஆண்டுகள்

இதனால், சம்பளம் குறைவாக இருந்த அல்லது வேலை செய்யாத ஆண்டுகள் கணக்கில் வராமல் போகும். இது நேரடியாக ஓய்வூதியத் தொகையை அதிகரிக்கும் வகையில் அமையும்.

இந்த இரண்டு மாற்றங்களும், குடும்ப மற்றும் தொழில் பொறுப்புகளை சமமாக பகிர்வதற்கான சமூக நீதி முயற்சியின் ஒரு பகுதியாக கருதப்படுகின்றன. பெண்கள் வேலை வாழ்க்கையில் எதிர்கொள்ளும் நிதி சவால்களுக்கு இது ஓரளவு இலகுவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading